நெருங்கும் தீபாவளி.. போனஸ் கேட்டு போராட்டத்தில் குதித்த.. கோவை தூய்மைப் பணியாளர்கள்
கோவை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தினந்தோறும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் மாநகராட்சி ஊழியா்களின் மூலமாக வாகனங்களில் வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்படுகின்றன. நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கும் மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இப்பணியில் நூற்றுக் கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போனஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தூய்மை பணியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் ரூ. 4 ஆயிரம் போனஸ் தருவதாக தெரிவித்த நிலையில் தொழிற்சங்கங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து, மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பலருக்கு 1,800 ரூபாயும், ஒரு சில பணியாளர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் எனவும் வங்கிக் கணக்கில் போனஸ் என அனுப்பப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நிறைவடைவதற்கு முன்பாகவே ஒப்பந்த நிறுவனத்தினரே போனஸ் தொகையை தீர்மானித்து வங்கிக் கணக்கில் செலுத்தியதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் போராட்டம் இன்று நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து கலந்துகொண்டனர். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், தனியார் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்ணயித்த போனஸ் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும் போனஸ் தொகை நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை, இஎஸ்ஐ, கூடுதல் பணிக்கு கூடுதல் சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தூய்மைப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு விடாமல், மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications