கோவை, கடலூர், சேலத்தில் கொரோனா விஸ்வரூபம்! சென்னைக்கு அடுத்ததாக அதிக பாதிப்பு
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 579 பேருக்கும் கடலூரில் 403; சேலத்தில் 405 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம். சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5,891
கோவையிலும் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதாகவே உள்ளது. தற்போது கடலூர், சேலத்திலும் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டி உள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 43
- செங்கல்பட்டு 390
- சென்னை- 1025
- கோவை- 579
- கடலூர்- 405
- தருமபுரி- 54
- திண்டுக்கல் - 136
- ஈரோடு - 106
- கள்ளக்குறிச்சி- 54
- காஞ்சிபுரம் - 136
- கன்னியாகுமரி - 111
- கரூர்- 64
- கிருஷ்ணகிரி- 49
- மதுரை- 123
- நாகப்பட்டினம் - 71
- நாமக்கல் - 83
- நீலகிரி - 14
- பெரம்பலூர்- 10
- புதுக்கோட்டை- 76
- ராமநாதபுரம்- 57
- ராணிப்பேட்டை- 98
- சேலம் - 403
- சிவகங்கை - 25
- தென்காசி - 82
- தஞ்சாவூர்- 147
- தேனி- 95
- திருப்பத்தூர்- 94
- திருவள்ளூர்- 285
- திருவண்ணாமலை- 213
- திருவாரூர் - 133
- தூத்துக்குடி- 57
- நெல்லை- 110
- திருப்பூர்- 87
- திருச்சி - 120
- வேலூர்- 159
- விழுப்புரம்- 224
- விருதுநகர்- 62