உணர்ச்சிவசப்பட்டு.. கோபத்துல பேசிட்டேன்.. பெரிசு படுத்தாதீங்க.. கலெக்டர் பொன்னையா வருத்தம்
கலெக்டர் பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன்" என்று இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்.
2 தினங்களுக்கு முன்பு, இன்ஸ்பெக்டர் ஒருவர் பாஸ் இல்லாமல் ஒருசிலரை அத்திவரதர் தரிசனத்துக்கு உள்ளே அழைத்து சென்றதாக தெரிகிறது. இதை நேரடியாக பார்த்துவிட்ட மாவட்ட கலெக்டர் பொன்னையா, இன்ஸ்பெக்டரை லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார்.
"எந்த ஸ்டேஷன் நீ.. பித்தலாட்டம் பண்ணவா வந்தே? தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கேப்பா.. என்னத்த நீ செக் பண்ணி அனுப்பறே.. பாஸ் இல்லாம அங்கே அவ்ளோ பேர் உட்கார்ந்திட்டு இருக்காங்க. என்னய்யா செக் பண்றே?

ஆவேசம்
இரு வரேன்.. உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும். திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம். என்ன ஸாரி.. யோவ்.. அங்க எத்தனை பேர் நிக்கறாங்க பாத்தியா? நீ இங்கதான்டா நிக்கறே? ஐஜியை வரசொல்லுய்யா.. ஐஜிக்கிட்ட நான் பேசறேன். இன்னைக்கு நீ சஸ்பெண்ட் ஆகறே.." என்று ஆவேசமாக சொன்னார்.

இன்ஸ்பெக்டர்
பொதுமக்கள் முன்னிலையிலேயே கலெக்டர் இன்ஸ்பெக்டரை திட்டியதும், ஒருமையில் பேசியதும் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் அந்த இன்ஸ்பெக்டர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். என்ன இருந்தாலும், கலெக்டர் இப்படி ஒருமையில் பேசியிருக்க கூடாது என்றுதான் பரவலாக மக்களிடம் பேச்சு எழுந்தது.

விளக்கம்
எத்தனையோ மன மற்றும் உடல் சுமைகளையும் தாங்கி கொண்டு இரவு பகலாக டியூட்டி பார்த்து வரும் போலீசாரை இப்படி பொது இடத்தில் பேசலாமா என்று கேட்டு, பாதுகாப்பு பணிகளுக்கு செல்லாமல் எதிர்ப்பை காட்டவும் சில போலீசார் முயன்றனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியதற்காக பொன்னையா விளக்கம் அளித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

ஒரே குடும்பம்
"பாதுகாப்பு பணியில் போலீசார் மிகச்சிறப்பாக செயல்படுகின்றனர். நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். ஆனால் அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன். உணர்ச்சிவசத்தால் பேசிய வார்த்தைகளை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று இன்ஸ்பெக்டரை பேசியதற்கு வருத்தம் தெரிவித்து, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications