ஆத்தா, மதுரை மீனாட்சி எப்போதும் காப்பாற்றுவா.. சித்த மருத்துவர் வீரபாபுவிற்கு சூரி நெகிழ்ச்சி கடிதம்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தி வரும் சித்த மருத்துவர் வீரபாபுவிற்கு, நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதை பாருங்கள்:
எல்லோரையும் 6 மாதமாக முடக்கிப் போட்டு விட்டது இந்த கொரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள் யாராக இருந்தாலும் சமூக இடைவெளி விட்டே பேச வேண்டியதாக இருக்கிறது. உலகத்துக்கே இதுதான் நிலைமை.

இந்தச் சூழலில் சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில், சித்த மருத்துவர் வீரபாபு அவரது மூலிகை கசாயம் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட 3500 க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். குறிப்பாக, இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.
அனைவரும் எட்ட நின்று பார்க்கும்போது நீங்கள் மட்டும் கிட்ட நின்று தொட்டு பரிசோதிக்கும்போது கண்ணுக்கு தெரியும் சாமியாகவே உங்களை கும்பிடத் தோன்றுகிறது அப்படி என்று வைத்தியம் பார்த்து விட்டு வரும் அத்தனை பேரும் சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.

இத்தனை பேரையும் காப்பாற்றிய, காப்பாற்றிக் கொண்டிருக்கிற, உங்களையும், உங்கள் கூட வேலை செய்பவர்களையும், அந்த ஆத்தா, மதுரை மீனாட்சி எப்போதும் காப்பாற்றுவா. முக்கியமா, நீங்க கொடுக்கிற கசாயம் கறிக்குழம்பு மாதிரி சும்மா ஜம்முன்னு இருக்கிறதாம். வாழ்த்துக்கள் வீரபாபு சார். இவ்வாறு சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications