குற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: குற்றவழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை, குற்றவழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. நட்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, குற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளை கண்டறியும் பணியில் ஈடுபடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் மீது மீண்டும் மீண்டும் வழக்குகள் போட்டு அவர்கள் மீண்டும் திருந்த முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுவது வேதனைக்குரியது என கூறியுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, குற்றவாளிகளின் மறுவாழ்வு குறித்து ஆராய்ந்து 8 வாரங்களில் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்திருந்தார்
மேலும் தமிழகம் முழுவதும் 2018 டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து மாவட்ட வாரியாக 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இன்று இவ்வழக்கில் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, இந்த அறிக்கையானது முழுமையானதாக இல்லை என்று கூறி அதிருப்தி தெரிவித்தார்.
விடுதலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் நீதிபதி கூறினார். இதனையடுத்து குற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த, ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications