தமிழ்நாடு முழுவதும் நாளை பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை: ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் நாளை (பிப்ரவரி 8) பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இம்மாதம் முதல் தேதி (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 - 26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

குறிப்பாக புதிய ரெயில் பாதைகள், இரட்டை வழித்தடமாக மேம்படுத்துதல், மேம்பாலங்கள், முக்கிய ரெயில் நிலையங்களில் நடைமேடை உட்பட செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கம், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் எதற்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை.
தொடர்ந்து இயற்கை பேரிடர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சொந்த நிதி ஆதாரத்தில் நிவாரணப் பணிகளும், மறுவாழ்வு, மறுசீரமைப்பு செய்த வகையில் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் பல முறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் முறையிட்டதை நிதிநிலை அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கி, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த வழங்க வேண்டிய நிதி என ஏராளமான நிதி பாக்கி வழங்க வேண்டும் என்பதை பட்ஜெட் கருத்தில் கொள்ளவில்லை.
ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் நாளை (08.02.2025) பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்துகிறது.
சென்னையில் பூக்கடை அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெறும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தொடங்கி வைக்கிறார். மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கலாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆங்காங்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக மக்கள் உணர்வை பிரதிபலிக்கும் இந்தப் போராட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications