திருச்சிக்காக முட்டி மோதும் திருநாவுக்கரசர் - குஷ்பு.. ஜெயம் யாருக்கு.. குமரிக்கும் செம டிமாண்டாம்!
திருச்சி தொகுதிக்கு திருநாவுக்கரசு, குஷ்பு இருவரும் போட்டி போட்டு வருகிறார்கள்.
சென்னை: இது தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என தெரியவில்லை.. எப்பவுமே ஆகாத காங்கிரசின் திருநாவுக்கரசுக்கும் குஷ்புவுக்கும் தொகுதி விஷயத்திலும் லடாய் ஆரம்பித்துள்ளதாம்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்தான் குஷ்பு. எப்போது திருநாவுக்கரசு தலைமை பொறுப்பு எற்றாரோ அப்போதிருந்தே கட்சி தலைமை ஆபீஸ் பக்கம் குஷ்பு ஒதுங்கியே இருந்தார்.
இவரை எப்படியாவது தமிழக தலைமை பொறுப்பில் உட்கார வைத்துவிட வேண்டும் என்று டெல்லி வரை சென்று முயற்சித்தவர் இளங்கோவன் என்றுகூட அப்போது பேசப்பட்டது.

திருநாவுக்கரசு
இந்த நிலையில் திருச்சியை வைகோ கேட்டுக் கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் டெல்லி லாபி மூலமாக இதே தொகுதியை கேட்டு கொண்டிருந்தார் திருநாவுக்கரசு. முன்னாள் அமைச்சர் நேருவிடமும் ராகுல்காந்தியிடம் இது சம்பந்தமான தனது விருப்பத்தை நேரடியாகவே தெரிவித்து அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தார்.

குஷ்பு
ஆனால் இப்போது குஷ்புவும் இதே திருச்சி தொகுதி வேண்டும் என்று கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாராம். குஷ்பு தென்சென்னையை கேட்டு பார்த்தார். அங்கு கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலமானவர்கள் இருப்பதாலோ என்னவோ அது மறுக்கப்பட்டுவிட்டது.

யாருக்கு?
இப்போது திருச்சியில் அவர் சார்பாக காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்திருக்கிறார். திருச்சி யாருக்கு போக போகிறது... திருநாவுக்கரசுக்கா? குஷ்புவுக்கா என்பதுதான் போட்டியே!

ஏகப்பட்ட டிமாண்ட்
இதெல்லாம் விடுங்க.. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கும் விருப்ப மனு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் இந்த 9 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டும் ஏகப்பட்ட கிராக்கியாம். அந்த ரெண்டு தொகுதிகள் திருவள்ளூர், கன்னியாகுமரியும்தான். இந்த தொகுதிகள்தான் வேண்டும் என்று வாய்ப்பு கேட்டு ஏகப்பட்ட மனுக்கள் குவிந்துவிட்டதாம். சொன்னால் நம்ப மாட்டீங்க.. கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 26 பேர் மனு செய்திருக்கிறார்களாம்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications