கருணாநிதி பிறந்தநாளை கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாக கொண்டாட ஆசிரியர் சங்கம் கோரிக்கை
சென்னை: அரசுப் பள்ளியில் கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாக கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என கணினி ஆசிரியர் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.குமரேசன் கூறுகையில், அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்க வேண்டும் என்ற நோக்கில் முதன்முதலாக அரசுப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்து தமிழகத்தில் தனி முத்திரை பதித்தார் மாண்புமிகு முதல்வர் மறைந்த கருணாநிதி.

கணினி அறிவியல்
அதோடு நின்று விடாமல் 2009ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்தார் . இன்றைய காலகட்டத்தில் கணினி அறிவியல் பாடம் என்பது காலத்தின் கட்டாயம் இதனை உணர்ந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக கணினி அறிவியல் பாடத்தில் நன்கு கற்று தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த விளங்க வேண்டும் என்ற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

கணினி அறிவியல்
ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கலைஞர் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடமும் அதற்கான புத்தகங்களும் இன்றுவரை 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது அவர் கொண்டு வந்த உயரிய பாடத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கலைஞர் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடமும் அதற்கான புத்தகங்களும் இன்றுவரை 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது அவர் கொண்டு வந்த உயரிய பாடத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஐந்து பாடம்
தமிழக கலைத்திட்டத்தில் ஐந்து பாடம் என்ற நிலையை மாற்றி ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவந்தார் இன்று பல மாநிலங்கள் இதனை பிரதான பாடங்களாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர் இந்த பெருமை எல்லாம் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு மட்டுமே!

பள்ளி
மாண்புமிகு கலைஞர் அவர்கள் மாற்ற நினைத்த தமிழக அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடம் என்ற நிலை தற்போதைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே நடைமுறைப்படுத்தி கலைஞரின் கனவுக் கல்வியான கணினி கல்வியை அரசு பள்ளிகளுக்கு கொண்டுவந்து அரசு பள்ளியை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக கொண்டுவருமாறு இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கை
கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் உருவாக்கித் தந்தவர் மாண்புமிகு கலைஞர் நம் இதயத்தை விட்டு நீங்கா இடத்தில் இருக்கிறார் . மாண்புமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று அரசுப்பள்ளி காண கணினி அறிவியல் நாளாக நாம்அனைவரும் கொண்டாடுவோம். அரசு பள்ளியை தலைநிமிரச் செய்வோம் என தனது கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications