கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாருக்கு... துபாயில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்..!
சென்னை: மறைந்த கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாருக்காக துபாயில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத் துணைத் தலைவராகவும், ESPN தமிழ் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும், சிறந்த விளையாட்டு வர்ணனையாளராகவும் திகழ்ந்த சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் கடந்த 22-ம் தேதி காலமானார்.

இவர் இறைத் தூதர் முஹம்மது, காற்று வெளியினிலே, அழைத்தார் பிரபாகரன் முதலிய நூல்களை எழுதியுள்ளார். இதேபோல் லண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரசு விருது, உட்படப் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான கல்லிடைக் குறிச்சி முகைதீன், 'இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கின் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் லியாகத் அலி, 'தமிழ்நாடு பண்பாட்டுக் கழக'த்தின் அஷ்ரஃப் அலி, 'ஈமான் கல்ச்சுரல் அமைப்பின்' செயலாளர் ஹமீது யாசின், நஜீம், 'அமீரக திமுக' செயலளார் முஸ்தபா, 'அமீரக மறுமலர்ச்சி பேரவை' செயலாளர் பாலமுருகன், 'அமீரக விடுதலைச் சிறுத்தைகள்' கட்சித் தலைவர் அசோகன், முத்தமிழ் வளவன், 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச்' சார்ந்த அப்துல் ஹாதி, 'மனிதநேய மக்கள் கட்சி'யின் இஸ்மாயில், 'அமீரக அமமுக' நிர்வாகி அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாத்தான் குளம் அப்துல் ஜப்பாரின் சமுதாயப் பணிகளையும்,எழுத்துப் பணியையும் நினைவு கூர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசினர். துடிப்புமிக்க இளைஞரைப் போல் இறுதி மூச்சுள்ளவரை இயங்கியவர் ஜப்பார் என்றும் அழகுத் தமிழ் மொழியில் கிரிக்கெட் வர்ணனையில் உச்சம் தொட்டவர் எனவும் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் இறுதியாக அப்துல் ஜப்பாரின் மூத்த மகனும், எழுத்தாளருமான ஆசிப் மீரான் தன் தந்தை குறித்தும், தந்தையுடனான தன்னுடைய புரிதல்களைக் குறித்தும் உணர்ச்சி பெருக்குடன் பேசினார். ஜப்பார் இலங்கை வானொலியில் சிறு வயதிலேயே பணிபுரிந்ததையும், அப்போது 300 ரூபாய் இலங்கைப் பணத்தை சம்பளமாக வைத்தே தன் கல்விக்காகச் செலவழித்த தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications