நைட்டை விட பகலில்தான் அதிகம் விக்குதாம்.. எது தெரியுமா.. "இது"தான்.. சென்னைக்காரங்க பலேதான்!
இந்த ஊரடங்கில் ஆணுறைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாம்
சென்னை: ஆணுறை அதிகமாக விற்பனை ஆகி வருகிறதாம்.. அதுவும் நைட் நேரத்தில்விட பகல் நேரத்தில்தான் அதிகப்பேர் ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்களாம்.. இந்த வருடம் காண்டம் விற்பனையில் சென்னை லீடிங்கில் உள்ளது என்றால் நம்புவீர்களா? அப்படித்தான் ஒரு ஆய்வு சொல்கிறது.
இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதும், பலருக்கு வேலை இல்லை.. பெரும்பாலானோர் வீட்டிலேயே தான் முடங்கி கிடந்தனர்.
வருமானம் இன்றி தவிப்பது, பசியால் வாடுவது, வீட்டு வாடகை தர முடியாமல் அவஸ்தைப்படுவது என பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் சிக்கி தவித்தனர்.

முடக்கம்
அதேசமயம், வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்ததால், ஆணுறையும் விற்பனை அதிகமானது. இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன... இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது.. அதன்படி, டன்சோ ஆப் மூலமாக ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கும் நிலையில், இந்த ஆண்டில் ஆணுறை ஆர்டர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.

ஆணுறைகள்
அதுமட்டுமல்ல, நைட் நேரங்களை விட, பகல் நேரங்களில்தான் அதிகப்பேர் ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்களாம்.. அதாவது நைட் நேரங்களை விட பகல் நேரங்களில் 3 மடங்கு அதிகமாக ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளனர்... நகரங்களை பொறுத்தவரையில், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் அதிக பேர் ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 6 மடங்கு அதிகமாகவும், சென்னையில் 5 மடங்கு அதிகமாகவும், ஜெய்ப்பூரில் 4 மடங்கு அதிகமாகவும், மும்பையில் 3 மடங்கு அதிகமாகவும், பெங்களூருவில் 3 மடங்கு அதிகமாகவும் ஆர்டர் செய்துள்ளனர்... ஆணுறை மட்டுமல்லாமல், சிகரெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரோலிங் பேப்பரும் ஊரடங்கு காலத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோலிங் பேப்பர்
சென்னையை விட பெங்களூருவில் 22 மடங்கு அதிகமாக ரோலிங் பேப்பர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கருவுறுதலைக் கண்டறியும் கருவிகளும் ஊரடங்கு காலத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில்தான் அதிகளவு கருவுறுதலைக் கண்டறியும் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளவாம். அதேபோல, ஆர்டர் செய்யப்பட்ட உணவையும் பட்டியலிட்டுள்ளது. இதன்படி பெங்களூர் மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி... சென்னையில் இட்லி, மும்பையின் தால் கிச்சடி, கூர்கான் ஆலு டிக்கி பர்கர், புனே மேகி ஆகிய உணவுகளை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications