மேலூர் தொகுதி வேட்பாளர் யார்? நிறுத்தி வைத்துள்ள காங்கிரஸ் மேலிடம்.. பின்னணியில் மாணிக்கம் தாகூர்?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதற்கான காரணம் தொடர்பாக காங்கிரஸ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இது கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி தொகுதி துரை சந்திரசேகர், வேளச்சேரி ஹசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, சோளிங்கர் முனிரத்தினம், பென்னாகரம் ஜிகேஎம் தமிழ்க்குமரன், அறந்தாங்கி டி.ராமச்சந்திரன், குளச்சல் தாரகை கட்பத், கிளியூர் ராஜேஷ் குமார், கடலூர் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலூர் தொகுதி கடந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பாக டி ரவிச்சந்திரன் போட்டியிட்டு சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இவர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் மாமனார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே மேலூர் தொகுதியை விடுத்து மதுரை வடக்கு தொகுதியை குறி வைத்து மாணிக்கம் தாகூர் பேசி வந்ததாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களாகவே மாணிக்கம் தாகூர் தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் சூழலில், மேலூர் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படாததற்கு இவர் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications