அரசியலில் ஆர்வமின்றி ஒதுங்கும் இளைஞர்கள்! கல்வித்துறை கண்டிப்பாக இதை செய்யணும்! காங்கிரஸ் வேண்டுகோள்
சென்னை: அரசியலில் ஆர்வமின்றி இளைஞர்களும், மாணவர்களும் ஒதுங்கும் நிலையில், அவர்கள் மத்தியில் ''கக்கன்'' திரைப்படத்தை தமிழக கல்வித்துறை கொண்டு சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பி கக்கன் திரைப்படத்தை மாணவர்களை காணச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் விடுத்துள்ள பதிவு வருமாறு;

தியாக சீலர் கக்கன் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அரசியலில் நேர்மை, எளிமை, துய்மை, ஆகியவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த கக்கன் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலன், உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அமரர் கக்கன் வகித்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதை இத்திரைப்படம் மூலம் காண முடிகிறது.
வெறுப்பு அரசியல் மற்றும் சுயநல அரசியலால் ஆர்வமில்லாமல் ஒதுங்கி நிற்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்திரைக் காவியத்தை கொண்டு சேர்க்கும் வகையில் மாநகராட்சி. அரசு பள்ளி. கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கின்ற வகையில். தமிழக கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இத்திரைபடத்தை காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டு கொள்கிறோம். இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் மூலமாக இளைய சமுதாயத்தினரிடையே தியாகத்தை போற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications