ஒரு மாவட்ட தலைவரும் மதிப்பதில்லை.. எதையும் பொருட்படுத்துவதில்லை.. அழகிரிக்கு வந்த சோதனை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகள் என எதையும் செயல்படுத்தாமல் பெரும்பாலான நிர்வாகிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காத நிர்வாகிகள் சிலர், கட்சிப்பணிக்கு மட்டும் நாங்கள் வேண்டும் ஆனால் சீட் மட்டும் பணம் இருக்கும் நபர்களை தேடிச்சென்று கொடுப்பீர்கள் என அழகிரியிடம் ஆதங்கப்பட்டுள்ளார்கள். அவர்களை அழகிரி தரப்பில் சமாதானம் செய்யப்பட்டு உரிய நேரத்தில் தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு வரும் என உறுதியளிக்கப்பட்டதாம். மேலும், பல மாவட்டங்களில் திமுக முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் கூட காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் கலந்துகொள்வதில்லையாம்.

இது தொடர்பான புகார் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றதை அடுத்து, மாவட்ட தலைவர்களை தொடர்பு கொண்ட அழகிரி தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கங்களில் நமது சார்பில் யாராவது கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதனை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். பதிலுக்கு சரி என்பதோடு முடித்துக்கொள்ளும் மாவட்ட தலைவர்கள், சொல்லிக்கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கத்திற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரையும் அனுப்பி வைப்பதில்லையாம். இப்போது தான் திமுக காங்கிரஸ் லடாய் முடிந்து நிலைமை ஓரளவு சுமூகமான நிலையில் மீண்டும் லேசாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோஷ்டிப்பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை நினைத்து அழகிரி வேதனைப்பட்டுள்ளார். கடந்தவாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் காங்கிரஸ் நிர்வாகி சபீன் என்பவர் கோஷ்டிப்பூசல் காரணமாக மண்டை உடைபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை செய்யாமலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவையில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஆதரவாளர்கள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.
திருச்சியில் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் மேயர் சுஜாதா, அடைக்கலராஜ் மகன் லூர்து என பல கோஷ்டிகள் காங்கிரஸில் உள்ளன. தனது பதவிக்காலத்தில் இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை பெற்றுத்தருவாரா கே.எஸ்.அழகிரி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications