பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது... அதை மறந்து விடலாம் - குஷ்பு யாரை சொல்கிறார்
பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்ட கட்சியை எல்லோரும் மறக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: தனது செயல்களாலும், நடவடிக்கைகளாலும் அடையாளமே தெரியாத அளவுக்கு கிழிந்து நார் நாராய்ப் போய் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்ட பழைய கட்சியை எல்லோரும் மறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று குஷ்பு கூறியுள்ளார். நமது நாட்டுக்குத் தேவை நல்லதொரு எதிர்க்கட்சியே தவிர, எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடும் கட்சி தேவையில்லை என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டி 20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பலரும் முகம்மது ஷமியை விமர்சித்து வருகின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்திருந்தார். இந்தியாவின் இந்த தோல்விக்கு ஷமிதான் காரணம் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இவர்களில் பலரும் பாஜகவினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், " முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு யாரும் அன்பைத் தரவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சேதமடைந்து விட்டது
இந்த நிலையில் குஷ்பு ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் பாஜகவை விமர்சிப்பவர்களை மறைமுகமாக கண்டித்ததோடு காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக வாரியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், நமக்கு தேவை ஊழல் இல்லாத பாரதம்தான். யாராவது தும்மினால் கூட உடனே பாஜகவைத்தான் குறை சொல்கின்றனர். தனது செயல்களாலும், நடவடிக்கைகளாலும் அடையாளமே தெரியாத அளவுக்கு கிழிந்து நார் நாராய்ப் போய் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்ட பழைய கட்சியை எல்லோரும் மறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர் கட்சி
நமக்கு தேவை ஆமாம் சாமி போடாத ஒரு எதிர்க்கட்சிதான். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கூட தங்களது கட்சியை எதிர்க்கட்சியாக நினைக்காத நிலையில்தான் கட்சி உள்ளது எல்லாம் காலம் என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

எதிர் கருத்துக்கள்
அவரது இந்த டிவீட்டுக்கு எதிர்வாதமும், வாதமும் அவரது டிவிட்டர் தளத்தில் களை கட்டியுள்ளன. நீங்கள் தமிழ்நாட்டில் தானே இருக்கிறீர்கள். நீங்கள் பாஜகவில் இணைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களை பாஜக வென்றுள்ளது என்று கேட்டுள்ளார்.

எதை சொல்கிறீர்கள்
கோவா மாநில அரசில் ஊழல் பெருக்கெடுத்து விட்டதாக முன்னாள் கோவா மாநில ஆளுநரும் தற்போதைய மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் சொன்னதைத்தான் மறைமுகமாக சொல்கிறீர்களா என்றும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர்.

எங்கே தாவப்போகிறீர்கள்
பழுது பார்க்க முடியாதது என்று எதை சொல்கிறீர்கள். அடுத்து நீங்கள் எந்த கட்சிக்கு தாவப்போகிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். டிஎம்சி கட்சிக்கா ஆம் ஆத்மி கட்சிக்கா என்று கேட்டுள்ள ஒரு நெட்டிசன், பாஜகவில் இருந்து நிறைய பேர் டிஎம்சி கட்சிக்கு தாவி வருகின்றனர் நீங்களும் அங்கேயே போகலாமே என்று கூறியுள்ளார். குஷ்வுவே தனது ட்வீட் பற்றி சொன்னால் தவிர அவரது ட்வீட்டின் அர்த்தம் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications