ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா இடத்திற்காகப் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு மூன்றாவது வேட்பாளராக பாஜக ஒருவரை நிறுத்தி உள்ளது. அதாவது மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களுக்கு பாஜாக தனது முதன்மை வேட்பாளர்களாக தருண் சுவக் மற்றும் ரஜினிஷ் அகர்வால் ஆகியோரை நிறுத்தியது. ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக மகேஷ் கேவத் என்பவரை பாஜக தனது மூன்றாவது வேட்பாளராகக் களம் இறக்கி உள்ளது. ஈஸியாக ஜெயிக்க வேண்டிய காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுபற்றி திமுக எம்பி வில்சன் கூறிய கருத்துக்களையும், அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதையும் விரிவாக பார்ப்போம்.

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலுக்குப் போட்டியிட காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனு, தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தன் மீதான ஒரு "வழக்கு" குறித்த விவரங்களைத் தனது வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் மறைத்துவிட்டார் என்று பாஜக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ளது..

Congress loses Rajya Sabha seat in Madhya Pradesh DMK MP Wilson posts a sarcastic remark

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்க்கியா மற்றும் பாஜக வேட்பாளர் மகேஷ் கெவாட் அளித்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தும் அதிகாரி இந்த நிராகரிப்பை செய்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைக் குறிப்பிடாததால் இந்த மனு செல்லாது என்று பாஜக தரப்பு வாதிட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூன் 8-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியால் வேறு வேட்பாளரை நிறுத்த முடியாமல் போயிருக்கிறது.

அந்த 'வழக்கு' என்ன?

காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநிலப் பொறுப்பாளராக இருக்கும் மீனாட்சி நடராஜன் மீதான இந்த வழக்கு, ஏ. ஸ்ரீலதா என்ற முன்னாள் கார்ப்பரேட் நிர்வாகி புகார் அளித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் கும்பம் சிவக்குமார் ரெட்டிக்கு எதிராகத் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலதா சுமத்தினார். அப்போது, கட்சித் தலைவர்கள் சிலரே அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஹைதராபாத் போலீசாரால் இந்த வழக்கு முடிக்கப்பட்டது. பின்னர் அவர் பெங்களூருவிலும் அளித்த புகார்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனிடையே ஸ்ரீலதா ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், காங்கிரஸ் அமைப்பில் பொறுப்பில் இருந்த மீனாட்சி நடராஜனிடம் தான் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மீனாட்சி நடராஜனை 4-வது நபராக (Accused No. 4) சேர்த்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

மீனாட்சி நடராஜன் சட்டப்படி குற்றவாளியா?

தெலுங்கானா மாநில போலீஸ் அதிகாரியின் விளக்கத்தின்படி, புதிய 'பாரதிய நியாய சன்ஹிதா ' மற்றும் 'பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா , 2023' பிரிவு 223-ன் படி, நீதிமன்றம் இந்த விவகாரத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை . எனவே, மீனாட்சி நடராஜன் சட்டப்படி 'குற்றவாளி' அல்ல, அவர் ஒரு 'எதிர்மனுதாரர்' மட்டுமே. இந்த வழக்கும் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளது.

காங்கிரஸ் மற்றும் வழக்கறிஞர்களின் வாதம்

மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி இந்த நிராகரிப்பை "முற்றிலும் சட்டவிரோதமானது" என்று சாடியுள்ளார். யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் தனிநபர் மனு தாக்கல் செய்யலாம். ஆனால், நீதிபதி அதை விசாரணைக்கு ஏற்கும் வரை அது குற்றவியல் வழக்காக மாறாது. நீதிமன்றத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண நோட்டீஸை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, அதனால் மறைத்தார் என்று கூறுவது தவறு என்று காங்கிரஸ் தரப்பு வாதிட்டிருக்கிறது. எது எப்படியோ காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க இருந்த ஒரு ராஜ்யசபா எம்பி பறிபோயிருக்கிறது. இதனால் போட்டியின்றி பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் மகேஷ் கேவத் எளிதாக வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது

திமுகவினர் கிண்டல்

இந்த சூழல் குறித்து கருத்து தெரிவித்து வரும் திமுக நிர்வாகிகள்... காங்கிரஸ் கட்சிக்கு இதெல்லாம் வேணும்.. சோனமுத்தா போச்சா என்பது போல் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலினிடம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஒரு ராஜ்யசபா எம்பி இடத்தை காங்கிரஸ் கூட்டணி பேரத்தில் வாங்கியிருந்தது. அதேபோல் தேர்தல் முடிந்த பின்னர், காங்கிரஸ் தவெக கூட்டணியில் இருந்து ஒரு ராஜ்யசபா இடத்தை வாங்கியிருந்தது. இதனை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படியான நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை திமுக உடன்பிறப்புகள் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.

திமுக எம்பி வில்சன் கருத்து

இதனிடையே இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறுகையில், "2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி இடத்தை ஒதுக்கியபோது, காங்கிரஸ் வேட்பாளருக்கு வேட்புமனு படிவங்களை நிரப்புவதிலும், அதன் பரிசீலனையிலும் திமுக தரப்பிலிருந்து முழு உதவி கிடைப்பதை அவர் உறுதி செய்தார். அந்த வேட்பாளரின் வெற்றி அறிவிக்கப்படும் வரை அவருடனேயே இருக்குமாறு எங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

எங்கள் தலைவர் உங்கள் வேட்பாளர்களைத் தன் சொந்த வேட்பாளர்களைப் போல அன்போடும் பாசத்தோடும் நடத்தினார்! அப்படிப்பட்ட ஒரு தலைவரை நீங்கள் அவமதித்துவிட்டு, உங்கள் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து இதுவரை எந்தவொரு பொது அறிக்கையும் வெளியிடாத ஒரு கட்சியில் (விஜய்யின் தவெகவில்) போய் இணைந்துவிட்டீர்கள்!

முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒருபோதும் பாஜகவிற்கு எதிராகப் பேச மாட்டார், ராகுல் காந்தி ஜி! 2029 தேர்தலுக்கு வாழ்த்துகள்!" இவ்வாறு கிண்டலாக வில்சன் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+