அதிருப்தியில் உள்ளாரா குஷ்பு.. சமாதானம் செய்ய பெரிய பதவியை தூக்கிக் கொடுக்கும் காங்கிரஸ்?
சென்னை: நடிகை குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு விரைவில் குணமடைய வாழ்த்து கூறினார். இதிலிருந்து இன்னும் சில விஷயங்களை அவர் செய்தது அவருக்கு பாஜக மீதான ஒரு ஈர்ப்பு இருப்பதை போல் தோற்றமளித்தது.
மேலும் சென்னையில் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னை அழைக்கவே இல்லை என குஷ்பு வேதனை தெரிவித்தார்.
இதென்ன புதுக்கதை..சீனா ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவு அமலுக்கு வரும்... பரூக் அப்துல்லா
குஷ்பு
இதனால் காங்கிரஸிலிருந்து பாஜகவில் சேர போவதாக தகவல்கள் வெளியானது. அதை குஷ்பு அப்பட்டமாக மறுத்தார். எனினும் தொடர்ந்து அந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஷ்பு டெல்லியில் குடும்பத்தினருடன் இருந்து கொண்டு பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ்
இதுகுறித்து குஷ்புவிடம் கேட்ட போது தேவையற்ற தகவல்களுக்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி விழாவில் பங்கெடுத்தும் உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களையும் அவர் சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ்
அதே நேரம் அகில இந்திய செயலாளர் கே.சி. வேணுகோபாலையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரசுக்கு விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், வசந்தகுமார் உள்பட 5 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
பெண்கள்
அந்த சமயத்தில் காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் சிறுபான்மையினருக்கு பதவி வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வசந்தகுமார் மரணம் அடைந்துவிட்டதால் செயல்தலைவர் பதவி காலியாகவே உள்ளது. இதனால் இந்த பதவி குஷ்புவுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.