சென்னை தேனாம்பேட்டையில் 2000 கோடி நிலம்.. எதிர்க்கும் காங்கிரஸ்.. ஹைகோர்ட்டில் பிரபல நிறுவனம் வழக்கு
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள பல ஏக்கர் நிலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமானது ஆகும். இங்குள்ள 12 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கட்ட தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நிலத்தை வழங்க காங்கிரஸ் கமிட்டி விரும்பவில்லை என கூறப்படுகிறது. சுமார் 2000 கோடி மதிப்புள்ள நிலத்திற்காக தனியார் நிறுவனம் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னையில் அண்ணா சாலையில் காமராஜர் அரங்கம் அமைந்துள்ள தேனாம்பேட்டை இடமும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாகும். இந்த இடத்தை அந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் வாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சென்னை தேனாம்பேட்டையில் 200 கிரவுண்ட் நிலம் காமராஜரால் வாங்கினார். இப்போது இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

இதில் 20 கிரவுண்ட் இடத்தில் காமராஜர் அரங்கம் கட்டப்பட்டு, மீதமுள்ள 180 கிரவுண்ட் இடம் மைதானமாக உள்ளது. இதில், 12 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1996-ம் ஆண்டு மே 28-ந் தேதி, ஸ்கைஹை கட்டுமான நிறுவனம் மற்றும் ஹீரல் கட்டுமான நிறுவனத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை ஒப்பந்தம் செய்தது.
பின்னர், இந்த திட்டத்துக்கு 1999-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி புதிய நிறுவனமான புளூ பேர்ல் கட்டுமான நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்தனர். இந்தநிலையில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த காங்கிரஸ் அறக்கட்டளை அறங்காவலர்கள் சி.சுப்பிரமணியம், பி.ராமச்சந்திரன், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்டோர் இறந்து விட்டனர். இதுவரை அங்கு கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படவில்லை. அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாததால், இந்த மைதானம் பயன்படுத்தபடாமல் அப்படியே காலியிடமாகவே இருக்கிறது. கட்டுமானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம், தற்போது வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கட்டுமான நிறுவனத்துக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் பிரச்சினை எழுந்தது.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கட்சிக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த காமராஜர் அரங்க மைதானத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு அங்கு அண்மையில் பொதுக்கூட்டம் மிக பிரமாண்டமாக நடந்தது. பல ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். மேலும் தனியார் நிறுவனம் நிலத்தை கையக்கப்படுத்துவதை தடுக்க சுவர் எழுப்பப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புளூ பேர்ல் கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் கூறுகையில், "கட்டுமான பணிக்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்னும் அமலில்தான் உள்ளது. இதற்காக பல கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேனாம்பேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலம் எங்கள் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த நிலத்தை பயன்படுத்தவும், உள்ளே, வெளியே தடையில்லாமல் செல்லவும் எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் தலையிட தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அறங்காவலர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்" என்று கூறி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற மே 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications