சிபிஎம்முக்கு கோவை, மதுரை, சிபிஐக்கு நாகை, திருப்பூர்.. திமுக ஒதுக்கீடு செய்ததாக தகவல்
சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.
திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு தலா 2 இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது. தற்போது தொகுதிகள் எவை என்பது முடிவாகி விட்டனவாம். விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அதை அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அந்த நான்கு தொகுதிகள் எவை என்ற தகவல் கசிந்துள்ளது. திமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தபோது மதுரை மற்றும் கோவை ஆகிய தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல சிபிஐக்கு நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்!
இருப்பினும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்போதுதான் இது குறித்து முறைப்படி தெரிய வரும்.