தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை: "தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம். தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் தூய சக்தி முதல்வர் விஜய்?" என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனை, தற்போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான காரசாரமான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தொடந்து நடந்து வரும் மின்வெட்டால் மக்களை இருட்டில் மூழ்கடித்துள்ளது முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி. மின்வெட்டால் மக்கள் மட்டுமல்ல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்த மின் தேவையில் தமிழகத்தின் வெளிசார்பு 19,126 மெகாவாட். மின்வாரியத்தின் மொத்தக்கடன் ரூ.2.50 லட்சம் கோடி ஆகும். கடந்த திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கான மின் கட்டண உயர்வு ரூ.45,000 கோடி. 5700 மெகா வாட், பல மின் உற்பத்தி திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அனல்மின் திட்டங்களால் மின் நிலையங்களின் உற்பத்தி கால தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும். அதற்கு என்ன திட்டங்கள் உள்ளன என்பதை த.வெ.க அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் மின் சுய சார்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்? இவரது நிலைப்பாட்டை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அதிக விலைகொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியை அதிகரிக்க மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதே மின்வெட்டு நிலை தொடரும். தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபட்டு சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் மின் உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் மக்களுக்கு அத்தியாவசிய தேவை. அதுபோல மின்சாரம் மாநில அரசின் அத்தியாவசிய சேவை என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். "நான் ஒரு தூயசக்தி. என்னிடம் வாருங்கள். எல்லாம் கிடைக்கும்" என்று சொன்ன விஜய், தற்போது நடந்துவரும் தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டுப் புகார்கள் ஆங்காங்கே எழுந்து வரும் நிலையில், பாஜகவின் இந்த நேரடி அட்டாக் த.வெ.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
-
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications