சென்னையில் மக்களுக்காக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு.. ஒப்பந்ததாரருக்கு அபராதம்.. அரசு அதிரடி
சென்னை: உரிய காலத்திற்குள் பணியை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி 126-வது வார்டில் ரூ.118.53 கோடி மதிப்பீட்டில் 702 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு உரிய காலத்திற்குள் பணியை முடிக்காததால் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி 126-வது வார்டில் ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.118.53 கோடி மதிப்பீட்டில் 702 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு, முன் புனையப்பட்ட கான்கிரீட் தொழில்நுட்பத்துடன் ஏ.பி.சி.டி. என 4 தொகுப்புகளாக ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாத ஒப்பந்த காலமாக 23.8.2024 அன்று திட்டப்பகுதியை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அடிப்படை சேவைகளான குடிநீர், கழிவுநீர், மின்சார வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி கடந்த 7 மாத காலத்தில் 45 சதவீத கட்டுமான பணி நிறைவடைந்து இருக்க வேண்டும். தொகுப்பு ஏ அடிக்கட்டு அளவிற்கு செங்கல் வேலை முடிந்துள்ளது. தொகுப்பு பி பைல் வேலையில் 437-ல் 372 முடிவடைந்துள்ளது. தொகுப்பு சி இன்னும் தொடங்கப்படவில்லை.
தற்போது வரை 15 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள 30 சதவீத பணி பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் குடியிருப்புதாரர்கள் காலி செய்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் குறித்த நேரத்தில் வீடு வழங்க முடியாத நிலையில் உள்ளது.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 17.3.2025 அன்று திட்டத்தை ஆய்வு செய்து உரிய காலத்திற்குள் குடியிருப்பினை குடியிருப்புதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உரிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்காத காரணத்தினால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனரால் கட்டண அபராதமாக நாள் ஒன்றுக்கு ரூ.2,000 விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்தில் கட்டுமான பணியை எட்டும் வரை இந்த அபராத கட்டணம் தொடரும். எனவே பணியினை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி 59-வது வார்டு பி.ஆர்.என். கார்டன் திட்டப்பகுதியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் 503 அடுக்குமாடி குடியிருப்புகள் தூண் மற்றும் 9 தளங்களுடன் தங்கள் நிறுவனத்திடம் 18.12.2024 அன்று திட்டப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.தற்போது 20 சதவீத பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
ஒப்பந்ததாரர் இதுவரை திட்டத்தின் முக்கிய கட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை. இந்த தாமதம், உரிய நேரத்தில் நிறைவடையாமைக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒப்பந்த காலக்கட்டத்தை மீறி தாமதம் செய்ததற்காக ஒப்பந்ததாரருக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளது. உங்கள் நிறுவனத்தினால் ஏற்கனவே ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தாமதம் தொடர்ந்தால் ஒப்பந்த விதிமுறைகளின்படி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications