குக்கர் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்… டிடிவி தினகரன் நம்பிக்கை
சென்னை: விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே. நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.ம.மு.க வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், குக்கர் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மார்ச் 26ம் தேதி குக்கர் சின்னம் வரும், அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறினார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதை அரசியலாக்க விரும்பவில்லை; குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி பிரச்சனைக்காக போராடும் மாணவர்களை கைது செய்தால் அ.ம.மு.க. போராடும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications