கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி குட்நியூஸ்? இந்த 8 சேலஞ்ச் இருக்கே? தவெக சொன்னதை செய்யுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு வங்கி கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக தலைவர் விஜய் தந்திருந்தார்.. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புதான் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.. ஒருவேளை விஜய் ஆட்சி அமைத்தால், இந்த வாக்குறுதி சாத்தியமா? இதற்கு நடைமுறை சிக்கல்கள் காரணங்கள் சொல்லப்படுகின்றன..

முதலாவதாக, தமிழக அரசின் கடன் சுமை தற்போது பல லட்சம் கோடிகளைத் தொட்டுள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வட்டி செலுத்துவதற்கே அரசு பெரிய தொகையை செலவிட வேண்டிய நிலை உள்ளது..

Cooperative Bank

இத்தகைய சூழலில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வது அரசு கருவூலத்திற்கு மிகப் பெரிய சுமையாக அமையும்.. இது மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையை மேலும் உயர்த்தி பொருளாதார சமநிலையை பாதிக்கக்கூடும்..

நிதி நெருக்கடி - அரசு ஊழியர்கள்

இரண்டாவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கே நிதி ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு சவால்கள் இருந்து வருகின்றன.. குறிப்பாக அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம், பல்வேறு மானியத் திட்டங்கள் போன்றவை நிலுவையில் இருக்கும்போது, புதியதாக ஒரு பெரிய அளவிலான தள்ளுபடி திட்டத்தை கொண்டு வருவது நிர்வாக ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்தலாம்.. மற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை இதற்காக மாற்ற வேண்டிய நிலையும் உருவாகலாம்..

கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி

மூன்றாவதாக, கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலையும் இங்கே முக்கியமானதாகும்.. விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க வேண்டும்..

அப்படி தாமதமானால், அந்த வங்கிகள் விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படலாம்.. இது கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டையே பாதிக்கக்கூடும்..

விவசாயிகளுக்கு ஹேப்பி?

நான்காவது, தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் விவசாயிகளிடையே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி, அவர்கள் கடன் திருப்பிச் செலுத்தும் மனநிலையை பாதிக்கக்கூடும்.. நீண்டகாலத்தில் இது வங்கி கடன் ஒழுக்கத்தையும் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது..

கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு இது ஏமாற்றமாகவும் இருக்கலாம்.. அரசியல் ரீதியாக இது ஆதரவை பெற்றாலும், பொருளாதார ரீதியாக செயல்படுத்துவது கடினமானதாகவே இருக்கும்..

வரி வருவாய் ஆதாரங்கள்

5.. தமிழகத்தின் வரி வருவாய் ஆதாரங்களை உயர்த்துவது என்பது தற்போதைய ஜிஎஸ்டி முறையில் மாநில அரசுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட விஷயமாகவே உள்ளது.. கூடுதல் வருவாய்க்காக மது விற்பனை அல்லது பெட்ரோல் டீசல் மீதான வரியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.. இத்தகைய நிலையில் புதிய வருவாய் வழிகளைக் கண்டறியாமல் இவ்வளவு பெரிய தொகையைத் தள்ளுபடி செய்வது நிதி மேலாண்மையில் சிக்கலை ஏற்படுத்தும்..

6.. விவசாயத் துறையில் தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை, இத்தகைய கடன் தள்ளுபடி திட்டங்கள் விழுங்கிவிடும் அபாயமும் உள்ளது.. நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கட்டமைப்பு வசதிகளே முக்கியம் எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.. எனவே உடனடி பலனைத் தரும் கடன் தள்ளுபடிக்கும், நீண்ட கால வளர்ச்சிக்கும் இடையே ஒரு சமநிலையை அரசு எட்ட வேண்டியிருக்கும்..

எட்டு சேலஞ்சஸ்

7.. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதும் ஒரு சவாலான பணியாகும்.. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள உண்மையான குறு மற்றும் சிறு விவசாயிகள் எத்தனை பேர், அவர்களின் ஒட்டுமொத்த கடன் தொகை எவ்வளவு போன்ற துல்லியமான தரவுகளைத் திரட்டி அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.. இதில் ஏற்படும் குளறுபடிகள் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும் வாய்ப்புள்ளது..

8. மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதிப் பங்கீடு மற்றும் பேரிடர் கால நிதி உதவிகளில் நிலவும் தாமதமும் இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்தும்.. மாநில அரசின் சொந்த நிதியை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய வாக்குறுதியைச் செயல்படுத்துவது என்பது ஒரு புதிய கட்சிக்கு நிர்வாக ரீதியாக மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாகவே அமையும்..

பயிர்க் கடன் சாத்தியமா?

தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையைக் கணக்கில் கொண்டால், இவ்வளவு பெரிய தொகையைத் தள்ளுபடி செய்வது என்பது அரசுக்கு மிகப் பெரிய நிதி சவாலாகவே இருக்கும்..

இருந்தாலும் ஒரு புதிய அரசு பதவியேற்கும்போது தனது முன்னுரிமைகளை மாற்றி அமைப்பதன் மூலமோ அல்லது புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறிவதன் மூலமோ இத்தகைய வாக்குறுதிகளைச் செயல்படுத்த முயற்சி செய்யலாம்.. எனவே, இது கடினமான காரியம் என்றாலும், முழுமையாகச் சாத்தியமற்றது என்று கூறிவிட முடியாது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+