58 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் குபீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு
சென்னை: இந்தியாவில் கொரோனா கேஸ் எண்ணிக்கை 1,11,92,088 ஆக உயர்ந்துள்ளது. 36 நாட்களுக்குப் பிறகு நாட்டில் 24 மணி நேர இடைவெளியில் 18,000 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. சென்னையிலும் கொரோனா அதிகரித்துள்ளது.
செயலில் உள்ள கேஸ்கள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்துள்ளன. மேலும் 24 மணி நேரத்தில், 108 இறப்புக்களுடன் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,57,656 ஐ எட்டியுள்ளது. ஒரே நாளில் மொத்தம் 18,327 புதிய கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 29 அன்று, 24 மணி நேர இடைவெளியில் 18,855 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதன் பிறகு தினசரி புதிய நோயாளிகளின் அதிகரிப்பு 18,000 க்கும் குறைவாகவே இருந்தது. இப்போதுதான் அது அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகம்
கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உயர்ந்துள்ளது. தேசிய கோவிட் -19 மீட்பு 96.98 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது. 108 புதிய கொரோனா இறப்புகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 53 பேரும், கேரளாவைச் சேர்ந்த 16 பேரும், பஞ்சாபில் இருந்து 11 பேரும் அடங்குவர்.

தமிழகம் 2வது இடம்
நாட்டில் இதுவரை 1,57,656 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 52,393 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 12,513 பேரும், கர்நாடகாவிலிருந்து 12,354 பேரும், டெல்லியில் இருந்து 10,918 பேரும், மேற்கு வங்கத்திலிருந்து 10,275 பேரும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 8,729 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 7,172 பேரும் உள்ளனர். 70 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொமொர்பிடிட்டி- அதாவது இணை நோய் உள்ளவர்களுக்கு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கிடுகிடு உயர்வு
சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 225 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. கடந்த 58 நாட்களுக்கு பிறகு, இது தான் மிக அதிகமாகும். ஒட்டுமொத்த தமிழகத்தில் 543 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சென்னையில் கொரோனா
சென்னையில் இதற்கு முன்பாக ஜனவரி 6ஆம் தேதி 228 கேஸ்கள் ஒரேநாளில் பதிவாகியிருந்தது. இதற்கு அடுத்தபடியாக இப்போதுதான் மிக அதிகமான கேஸ் பதிவாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் மிகவும் நெருக்கமாக பழகுவது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உருமாறிய கொரோனா பரவல், நாடு முழுக்க நோய் பரவல் அதிகரிக்க மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications