மகாராஷ்டிராவில் திடீர் வேகம்.. 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: மகாராஷ்டிராவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,261,470 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 158,079 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,917,624 பேர் குணமடைந்து உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,90,884 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,82,670 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7176 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,56,041 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,36,616 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12373 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,81,056பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,39,281 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4329 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 22,28,471 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 20,89,294 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 52556 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,56,246 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,39,648 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12525 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications