ஒரே நாளில் 11 குழந்தைகள்.. மொத்தமாக 142 குழந்தைகள்.. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு!
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மொத்தமாக 142 குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை.
தமிழகத்தில் மொத்தமாக 142 குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இப்படி நாளுக்கு நாள் கொரோனா காரணமாக குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது.
இன்று மட்டும் தமிழகத்தில் 11 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குழந்தைகளிலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 66 பெண் குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் 76 ஆண் குழந்தைகளுக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மார்ச் வசூல்.. 1.13 லட்சம் கோடியிலிருந்து 28,309 கோடியாக சரிவு.. மத்திய அரசு அதிர்ச்சி!
தமிழகத்தில் மொத்தமாக 1553 ஆண்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 770 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
சென்னையில் 60க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தைகள் கூட அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் கொரோனா ஏற்படாது என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு எப்படி தமிழகத்தில் கொரோனா ஏற்படுகிறது என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.