88% பேருக்கு அறிகுறியே இல்லை.. ஆனாலும் கொரோனா.. தமிழகத்தின் நிலை இதுதான்.. ஷாக்கிங் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களில் 88% பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை.

கொரோனா உலகம் முழுக்க இரண்டு வகைகளில் பரவி வருகிறது. அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள், அறிகுறியே இல்லாத கொரோனா நோயாளிகள். இதில் அறிகுறி உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

Coronavirus: 88% of cases are asymptomatic in Tamilnadu

அறிகுறி இல்லாத நபர்களுக்கு இப்படி எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் கொரோனா ஏற்படும். இவர்களுக்கு தங்களுக்கு கொரோனா இருப்பதே தெரியாத நிலை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது அறிகுறி இல்லாமல்தான் அதிகமாக கொரோனா கேஸ்கள் பரவி வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் 70% அறிகுறி இல்லாத கேஸ்கள் ஆகும். சென்னையில் ஏற்பட்ட கேஸ்களில் 85% கேஸ்கள் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட கேஸ்கள் ஆகும்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களில் 88% பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 12% கேஸ்கள் அறிகுறி உள்ள கேஸ்கள். தமிழகத்தில் அறிகுறி மூலம் கொரோனா வந்தவர்களில் 40% பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளது. காய்ச்சல்தான் தமிழகத்தில் முக்கியமான கொரோனா அறிகுறியாக உள்ளது. இருமல் 37% ஏற்பட்டுள்ளது. இதுதான் முக்கிய அறிகுறி ஆகும். மற்ற அறிகுறிகள் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.தமிழகத்தில் தொண்டை வலி 10%. மூச்சு திணறல் 9% பேருக்கு ஏற்பட்டுள்ளது. 4% பேருக்கு மூக்கில் சளி இருந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 17082ஐ ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+