சென்னையில்.. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ரயில்வே ஊழியர் அனுமதி.. சோதனை!
நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது.
சென்னை: நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு நேற்று கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.

இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன்பின் அமெரிக்காவில் சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இந்த சிறுவன் நேரடியாக அமெரிக்காவில் இருந்து சென்னை வரவில்லை. இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து கத்தாரில் உள்ள டோஹா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்போது கொரோனா ஏற்பட்டு இருக்கலாமோ என்று கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது நபராக நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது. இவருக்கு செய்யப்பட முதற்கட்ட சோதனையில் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் தற்போது பெரம்பூர் தென்னக ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications