எப்ப பாரு என்ன முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே.. மறந்துட்டீங்களா.. சிம்பு நச்!
முஸ்லீம்கள் என்ற பிரிவினை வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னை: "முஸ்லிம்களுக்கு உணர்வு கிடையாதா.. அன்னைக்கு வெள்ளம் வந்தப்போ மசூதியில இடம் தந்து அத்தனை பேருக்கும் சோறு போட்டாங்களே, அப்போ அது தேச விரோதமான ஒரு குற்றமா தெரியலையா? இப்போ மட்டும் தெரியுதா? எப்ப பாரு முஸ்லிம்களை தீவிரவாதம், தீவிரவாதின்னு சொல்லிட்டு?, எல்லாம் தமிழர்கள் அப்படிங்கிற உணர்வு நமக்கு வேணும்" என்று நடிகர் சிம்பு பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
சிம்பு - தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள், தனிக்கென தனி வழி என்று சென்று கொண்டிருப்பவர்.. அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்து வருகிறார்.. சமீப காலமாக அரசியல், சினிமா, போராட்டம் குறித்த கருத்துக்களையும் இவர் தெரிவித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி காவிரி விவகாரம் வரை தமிழக பிரச்சனைகளில் சிம்புவின் கருத்துக்கள் கவனிக்கப்பட்டவையாகவே அமைந்தன.. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து காவிரி பெறுவதற்கு புதுவிதமான ஐடியாவை சொல்லி, அனைத்து தரப்பு மக்களையும் சிலிர்க்க வைத்தார்.

வீடியோ
சுருக்கமாக சொன்னால் காவிரி விவகாரம் வெறிபிடித்து உச்ச நிலையில் இருந்தபோது, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு தண்ணீரை வழங்கி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.. இதற்கு பிறகுதான் இரு மாநில மக்களின் விரோதமும் குறைந்து இணக்கமானார்கள்.. இதற்காக சிம்பு எடுத்த புது முயற்சி பெருமளவு உதவியது என்பதை மறுக்க முடியாது!

டெல்லி மாநாடு
இந்நிலையில், கொரோனா பிரச்சனை இந்தியாவில் தலை தூக்கி உள்ளது.. மாநிலங்களில் தமிழகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கு காரணம் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த இஸ்லாமியர்கள்தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.. சோஷியல் மீடியாவிலும் இது பூதாகரமாக சொல்லப்படுகிறது.

சிம்பு
கொரோனா விவகாரத்தில் சாதி, மதம், பிரிவினை பார்க்கக்கூடாது என்று நம் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் அடிக்கடி வலியுறுத்தியபடியே உள்ளனர்.. ஆனாலும் இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. நொந்து போயுள்ளனர்.. இந்த நேரத்தில் சிம்பு முன்பு ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதை தற்போது சோஷியல் மீடியாவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.. அந்தப் பேட்டியில் சிம்பு கூறியிருந்ததாவது:

முஸ்லீம்கள்
"முஸ்லிம்கள் என்ன தமிழர்கள் கிடையாதா... முஸ்லிம்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையா? அவங்களுக்கு உணர்வு கிடையாதா? இது தேச விரோதம் என்கிற மாதிரி இந்த விஷயத்தை திசை திருப்புவது சரியா? அப்படின்னா வெள்ளம் வந்துச்சே அப்போ அத்தனை மசூதியிலும் முஸ்லிம்கள் இடம் கொடுத்து சோறு போட்டாங்களே.. அப்போ அன்னைக்கு அது தேச விரோதமான ஒரு குற்றமா?
தமிழர்கள்
எப்ப பாரு முஸ்லிம்களை தீவிரவாதம், தீவிரவாதின்னு சொல்லிட்டு? யாரையாவது கார்னர் பண்றதுக்கு ஒரு பேர் வேணும்.. அதுக்காக முஸ்லிம்களை பயன்படுத்திக்கிறதா? ஒரு இந்துவா இருந்தாலும், கிறிஸ்துவனா இருந்தாலும், முஸ்லீமா இருந்தாலும், எந்த சாதி, மதமா இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு எல்லாரும் தமிழர்கள் அப்படிங்கிற உணர்வுக்காகத்தான் போராடணும்" என்கிறார். சிம்பு பேசிய இந்த பேச்சிற்கு ஏராளமான வரவேற்புகள் குவிந்து வருகின்றன!
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications