ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தானுங்க.. ஏழைங்களுக்கு எங்கே நோய் வந்தது? முதல்வர் அதிரடி
கொரோனாவைரஸ் பரவல் குறித்து முதல்வர் எடப்பாடியார் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தானுங்க.. ஏழைங்களுக்கு எங்கே நோய் வந்தது? வெளிநாடு, வெளிமாநிலம் போய்ட்டு வந்து இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்க.. ஏழைகள் கிட்ட தாராளமா பேசலாம்.. பணக்காரங்கள கண்டால்தான் பயமா இருக்குது.. தமிழகத்தில் இந்த நோய் உருவாகலையே" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஊரடங்கு அமலில் இருப்பது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கொரோனா தடுப்பு குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் விலாவாரியாக எடுத்து கூறினார். முதல்வர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
"நீங்க செய்தி சேகரிக்க போறீங்க.. அப்படி செய்தி சேகரிக்க போகும்போது உங்களுக்கு ஏதாவது, (எதுவும் வரக்கூடாது, ஆண்டவனை வேண்டிக்கிறேன்.. நீங்கல்லாம் மக்களுக்கு ஊடகத்தின் வாயிலாக நல்ல செய்திகளை குடுத்துட்டு இருக்கீங்க..) தொற்று நோய் வந்தால், உங்களுடைய செலவையும் அரசே ஏற்கும்.. முழு செலவையும் ஏற்று கொள்ளும்.
அது மட்டுமில்லை.. அந்த நோயின் தன்மை முற்றிப்போய் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால் அந்த பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் எங்கள் அரசு துணை நிற்கும்.. ஆனால் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் பதிவு செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டால் அரசு 5 லட்சம் ரூபாய் வழங்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், இதன் எண்ணிக்கை இன்னும் 2, நாளில் குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்த முதல்வர் தொடர்ந்து பேசும்போது, "ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தான்.. ஏழைங்களுக்கு எங்கே வந்தது? அவங்கதான் கொண்டு வந்து விட்டுட்டாங்க.. வெளிநாட்டில் இருந்து, வெளிமாநிலத்தில இருந்து கொண்டு இறக்குமதி ஆன நோய்தானே.. ஏழைகளுக்கு நோயே கிடையாது.
ஏழைகள் கிட்ட தாராளமா பேசலாம்.. பணக்காரங்கள கண்டால்தான் பயமா இருக்குது.. ஏன்னா, வெளிநாடுகளுக்கு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி பண்ணிட்டு இருக்காங்க.. அதேமாதிரி வெளிமாநிலத்துக்கும் பலபேர் போய்ட்டு வந்து, இங்க அந்த நோய் ஏற்பட்டிருக்கு.. இதனாலதான் நோய் வந்திருக்கே தவிர தமிழகத்தில் இந்த நோய் உருவாகலையே" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications