4 அடுக்கு பாதுகாப்பு வளையம்.. தமிழ்நாட்டில் சர்ரென உயர்ந்த ஓமிக்ரான்.. ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 33 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த 1 வாரம் முன் ஜீன் சோதனைக்காக 57 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் ஒருவருக்கு ஏற்கனவே ஓமிக்ரான் உறுதியானது.
இன்று 33 பேருக்கு கூடுதலாக உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 54 பேருக்கும், டெல்லியில் 57 பேருக்கும் ஓமிக்ரான் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திடீரென ஓமிக்ரான் உயர்ந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் ஏற்கனவே கட்டுப்பாட்டு பணிகள் தொடங்கிவிட்டன. அதிகம் கேஸ் பரவ வாய்ப்பு உள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். விமான நிலையத்திலேயே சோதனை செய்து அங்கேயே கட்டுப்பாடுகளை தொடங்கிவிடுகிறோம். அதன்பின் காண்டாக்ட்ஸ்களை சோதனை செய்கிறோம்.

ஓமிக்ரான் டாக்டர் ராதாகிருஷ்ணன்
4700க்கும் அதிகமான காண்டாக்ட்ஸ்களை சோதனை செய்து உள்ளோம். இதில் 57 பேருக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில்தான் 34 பேருக்கு ஓமிக்ரான் வந்துள்ளது. இன்னும் 23 பேருக்கு ஜீன் முடிவுகள் வர வேண்டும். இவர்கள் எல்லோரும் 4 அடுக்கு பாதுகாப்பில் உள்ளனர்.

தமிழ்நாடு ஓமிக்ரான்
4 அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது. எங்கெல்லாம் சூப்பர் ஸ்ப்ரெட் நடக்க வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். கூடுதலாக கண்காணிக்க சொல்லி இருக்கிறோம். உடனடியாக கண்டுபிடித்து தனிமைப்படுத்தி வருகிறோம்.
Recommended Video

அச்சம் வேண்டாம்
இதனால் எல்லோரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எஸ் ஜீன் டிராப் கண்டறியப்பட்டதும் ஜீன் சோதனைக்கு அனுப்பிவிடுகிறோம். உடனே அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்பதால் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications