உங்கள் மாவட்டத்தில் என்ன நிலை.. மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை.. முக்கிய முடிவு?
தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடனே ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னை: தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடனே ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா தொடார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
Recommended Video
யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. ஏற்கனவே 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று மேலும் மூவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் தங்கி இருக்கும் தாய்லாந்தை சேர்ந்த இருவருக்கும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சென்னையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி நடவடிக்கை
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடனே ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா தொடார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக இந்த கண்காணிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து இருக்கும் நடவடிக்கை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

மருத்துவமனை
அந்தந்த மாவட்டங்களின் நிலையை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். மாவட்டங்களில் இருக்கும் எல்லா மருத்துவமனைகளையும் கண்காணிக்க இதில் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் அனுமதி ஆகும் எல்லோரையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நபர் எல்லா பணிகளையும் கவனிக்க முடியாது. அதனால் மாவட்ட ஆட்சியாளர்கள் இதில் தீவிரமாக களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் தூய்மை
முக்கியமாக கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. எல்லா மாவட்டத்திலும் உள்ள வெளிநாட்டினர் குறித்த லிஸ்ட் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூரில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், பொது இடங்களை உள்ளூரில் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

வதந்தி தவறு
அதேபோல் வதந்தி பரப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வதந்திகளை கண்டுபிடிக்க குழு அமைக்க வேண்டும். வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களை கண்காணிக்க வேண்டும். தான மூலம் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல் மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications