குட் நியூஸ்.. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா இல்லை.. அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதித்துள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரின் மனைவிக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona Virus Update : எத்தனை பேருக்கு கொரானா?

    சீனாவையே பேய் போல் ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தற்போது அன்டார்டிகா தவிர்த்து ஏனைய கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

    இந்த வைரஸ் சீனாவை விட 8 மடங்கு வேகமாக மற்ற நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. இதனால் சாதாரண காய்ச்சல் என்றாலே மக்கள் அச்சம் கொண்டனர்.

    கொரோனா

    கொரோனா

    உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்தது. இவர் ஓமன் நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் 12 ஆண்டுகளாக ஓமனில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து இவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொரோனா அறிகுறி

    கொரோனா அறிகுறி

    இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அங்கு நடந்த தெர்மல் சோதனையில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

    சிறுவனுக்கு

    சிறுவனுக்கு

    இந்த விமானம் அமெரிக்காவிலிருந்து கத்தாரில் உள்ள டோஹா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அங்கு சில பயணிகளை ஏற்றிக் கொண்டு அதன் பின்னர் சென்னை வந்துள்ளது. அமெரிக்காவும் கத்தாரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் என்பதால் இந்த சிறுவனுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

    சோதனை முடிவுகள்

    இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது அவரது ரத்த மாதிரியின் சோதனை முடிவுகளில் தெரியவந்தது. அது போல் ஓமன் நாட்டிலிருந்து வந்தவருக்கு கொரோனா இருந்த நிலையில் அவரது மனைவிக்கும் அந்த பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அமைச்சர் சி விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் கூறுகையில் நற்செய்தி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதித்தவரின் மனைவிக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை. எனினும் இருவரையும் தமிழக சுகாதாரத் துறை கொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+