சென்னையில்.. பிரபல பெண் டிவி தொகுப்பாளருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் தனியார் டிவி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது
சென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக தலைநகர் சென்னை தான் நீடித்து வருகிறது.. மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பாதித்தோரின் எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் திருவிக நகர் மண்டலத்தில் 448 பேருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் ராயபுரத்தில் 422 பேருக்கும் நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றிலிருந்து 358 பேர் இதுவரை குணமாகியிருந்தாலும் 23 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், 2, 255 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதனால்தான் சென்னையில் டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என்று உறுதியாக அரசு அறிவித்தது.. இன்றும்கூட சென்னை கோயம்பேடு உதவி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரை உடனடியாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.. டாக்டர்கள், போலீஸ்காரர்களை போலவே மீடியாவில் உள்ளவர்களும் உயிரை பணயம் வைத்துதான் வேலை பார்த்து வருகின்றனர்.. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் பாதுகாப்பு கவசங்களை செய்தியாளர்களுக்கு தந்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளது. எனினும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக வேறு ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பெண் செய்தியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியதாகி உள்ளது மீடியா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications