2-ம் அலை காலத்தில் உயிரிழப்பு அதிகம்.. இதை அரசு கவனிக்க வேண்டும்... ட்வீட் போட்டு சொன்ன ராமதாஸ்

இரண்டாம் அலை பரவல் பாதிப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா முதல் அலை காலத்தில் தமிழகத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 129 மட்டும் தான். ஆனால், இப்போது இரண்டாம் அலை காலத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 493. இதை அரசும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சுட்டிக் காட்டி உள்ளார்.

இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.. அதன் தாக்கம் பெரும் அளவில் இருக்கிறது... இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லாக்டவுனும் அமலில் உள்ளது..!

Coronavirus second wave and DR Ramadoss tweeted about it

இந்நிலையில், கொரோனா நிலவரம், அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடாமல் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.. சில சமயம், தொற்றை தடுக்கும் வகையில் மாநில அரசுக்கும் ஆலோசனைகளை சொல்லி வருகிறார்.. நல்ல திட்டம் என்றால் பாராட்டுகிறார்.. குறைகள் என்றால் விமர்சிக்கிறார்..

அந்த வகையில், "நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொற்று தொட்டுவரும் நிலையில், மற்றொருபுறம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டும் கண்டறியப்படாமலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டதாகவும், அதுகுறித்த செய்திகள் மறைக்கப்படுவதாகவும், கொரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும்" என்றும் சில தினங்களுக்கு முன்புகூட தெரிவித்திருந்தார்.

தற்போதும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "கொரோனா முதல் அலை காலத்தில் தமிழகத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 129 மட்டும் தான். இப்போது இரண்டாம் அலை காலத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 493. இதை அரசும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+