சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக தீவிரமாக பரவுகிறது.. கட்டுப்படுத்த முடியவில்லை.. தமிழகத்தில் இன்று 1892 பேருக்கு கொரோனா.. ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த மே 31ம் தேதி தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 1000+ கேஸ்கள் பதிவானது. அதை தொடர்ந்து தினமும் தமிழகத்தில் 1000+ கேஸ்கள் பதிவாகி வருகிறது.

அதிலும் கடந்த ஒரு வாரமாக தினமும் 1500+ கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது. தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் மிக தீவிரமாக பரவி வருகிறது.

 புதுச்சேரியில் 14 வயது சிறுமி உட்பட 7 பேருக்கு புதியதாக கொரோனா- மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு புதுச்சேரியில் 14 வயது சிறுமி உட்பட 7 பேருக்கு புதியதாக கொரோனா- மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு

தமிழகம் இன்று

தமிழகம் இன்று

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 40698 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று புதிய உச்சமாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் 2000ஐ நெருங்கி வருகிறது.

சென்னை இன்று

சென்னை இன்று

சென்னையில் இன்று மொத்தம் 1479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றுதான் இதுவரை இல்லாத மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக 28924 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 13906 ஆக உள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு இன்று அதிக கேஸ்கள் ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று 1342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 22047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 18281 ஆக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வேகமாக தமிழகத்தில் குறைந்து வருகிறது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 367 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தினமும் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று 23 பேர் பலியான நிலையில் இன்று தமிழகத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: Tamilnadu gets 1982 cases in a single day, 40698 cases so far in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X