இது கொஞ்சம் சிக்கலானது.. தமிழகத்திற்கு காத்திருக்கும் புதிய சவால்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: தமிழகத்தில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய சவால் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 17000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082ஐ ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது.

என்ன விளக்கம்
தமிழகத்தில் ஒரே நாளில் எப்படி இத்தனை கேஸ்கள் வந்தது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் மூலம்தான் இப்போது கேஸ்கள் அதிகம் வருகிறது. இவர்கள் எல்லாம் தமிழகத்தில் எல்லையிலேயே சோதனை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறார்கள். முக்கியமாக வெளி மாநிலங்களில் இருந்து பலர் வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக இது அதிகம் உள்ளது.

வெளிமாநிலம் நிலை
இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 93 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு விமானம், தற்போதைய விமான சேவை மூலம் பலர் தமிழகம் வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 942 பேர் இப்படி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து 726 பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்களை எல்லையிலேயே நாங்கள் ஸ்கிரீனிங் செய்கிறோம்.

அறிகுறி உள்ளவர்கள்
இவர்கள் தமிழகம் வந்த பின் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரும் தமிழர்கள். தங்கள் குடும்பத்தை பார்க்க இவர்கள் தமிழகம் வருகிறார்கள். இவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் மூலம் தமிழகத்திற்கு உள்ளே கொரோனா ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்.

என்ன சவால்
இது கொஞ்சம் சவாலான விஷயம். இதனால் தமிழகத்தில் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் இன்னொரு சவாலான விஷயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தற்போது தினமும் 25 விமானங்கள் வருகிறது. இதன் மூலம் கொரோனா கேஸ்கள் வர வாய்ப்புள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வராமல், கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தீவிர சோதனை
இப்படி தமிழகம் வரும் நபர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறோம். விமான நிலையத்தில் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் மூலம் பிறருக்கு கொரோனா பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கண்டிப்பாக கொரோனா பரவலை தடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications