இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4343 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 98392 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிக கேஸ்கள் தமிழகத்தில் வந்துள்ளது. தினமும் 3000+ கேஸ்கள் வந்த நிலையில் ஒரே அடியாக இன்று 4000+ கேஸ்கள் இன்று தமிழகத்தில் வந்துள்ளது.
மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்!
பலி எண்ணிக்கை
சென்னையில் இன்று 2027 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 62598 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக 57 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1321 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
டிஸ்சார்ஜ் எத்தனை
தமிழகத்தில் இன்று மட்டும் 3095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தமாக 56021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இன்று 33488 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1235692 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
என்ன சோதனை
தமிழகத்தில் இன்று 32456 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக பேருக்கு 1179649 கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே நாம்தான் அதிகமாக கொரோனா சோதனை செய்துள்ளோம். மகாராஷ்டிரா, டெல்லி, கேரளாவை விட அதிகமாக நாம் சோதனை செய்து இருக்கிறோம். சென்னையை அடுத்து மதுரையில் இன்று 274 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் எப்படி
மதுரையில் மொத்தமாக 3133 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 171 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மொத்தமாக 5807 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.திருவள்ளூரில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் மொத்தமாக 4176 கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.