கொரோனா பாதிக்கப்பட்டவரின் சொந்த ஊருக்கு சென்ற மருத்துவ குழு.. காஞ்சிபுரத்தில் தீவிர சோதனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் சொந்த ஊருக்கு தமிழக அரசு சார்பாக மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் சொந்த ஊருக்கு தமிழக அரசு சார்பாக மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் மொத்தம் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.
நேற்றுதான் இவருக்கு இந்த வைரஸ் தாக்கியது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்த முடிவு செய்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு
வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். 12 வருடமாக அங்கு பணியாற்றும் இவர், அவ்வப்போது தமிழகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு வந்ததை அடுத்து சரியாக 10 நாட்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார்.

காஞ்சிபுரம் எப்படி
காஞ்சிபுரம் வந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வறட்டு இருமல், சளி தொல்லை இருந்துள்ளது. இந்த பிரச்சனையோடு அவர் சென்னைக்கும் ஒருமுறை சென்று வந்துள்ளார். இதையடுத்து இவர் சிகிச்சைக்காகக் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரியை புனே அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தது.

கொரோனா வைரஸ்
அதன்படி அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்று கொரோனா பாதித்தவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழு, அந்த ஊரில் உள்ள எல்லோரையும் சோதனை செய்ய உள்ளது. அந்த நபர் தொடர்பு கொண்ட எல்லோரையும் சோதனை செய்ய உள்ளது. இதனால் 10 மருத்துவர்கள் கொண்டு குழு அங்கே செல்கிறது.

மொத்த கிராமம்
அதேபோல் அந்த நபர்கள் குடும்ப உறுப்பினர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். இவர்களில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள அந்த சிறிய கிராமம் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த கிராமத்தின் பெயரை தமிழக அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications