இந்தியாவில் கொரோனாவிற்கு 3933613 பேர் பாதிப்பு - 3034786 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3933613 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து 3034786 பேர் மீண்டுள்ளனர்.
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3933613 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 3034786 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் 68594 பேர் மரணமடைந்துள்ளனர். 830233 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
பல கட்ட கட்டுபாடுகளை விதித்தாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3933613 ஆக உயர்ந்துள்ளது. 3034786 பேர் மீண்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி இந்தியாவில் 68594 பேர் மரணமடைந்துள்ளனர். 830233 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா- பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மற்றொரு சகோதரரும் மரணம்
உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.64 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.35 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40.46 லட்சம் பேராக உயர்ந்துள்ளது.
தினசரியும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருவதால் இன்னும் இரு தினங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலை முந்தி விடும்.