"ரேபிட் கிட் விலை என்ன.. எத்தனை வாங்கனீங்க.. வெளிப்படை வேணும்".. முதல்வரை விடாமல் விரட்டும் ஸ்டாலின்
ரேபிட் கிட் கருவிகளின் விலை என்ன என்று அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "ஸ்டாலின் கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று முதல்வர் சொன்னாலும், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வருகிறார் திமுக தலைவர்!! ரேபிட் டெஸ்ட் கிட் விலை என்ன, எத்தனை வாங்கினீங்க என்று தற்போது அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
தமிழகத்திலும் வைரஸ் பரவல் பெருகி வருகிறது.. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிக்கவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தடுக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த கொரோனாவைரஸ், தமிகத்திலும் பரவி பெருகி வருகிறது.. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிக்கவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தடுக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்த தொற்று உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள போதுமான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் இல்லை.. அதனால் டெஸ்ட் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள வெளிநாடுகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பரிசோதனை
அரை மணி நேரத்தில் இந்த ரிசல்ட்களை தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.. எனவே கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு ஏற்கனவே ஆர்டர் செய்திருந்தது. அதன்படி சென்னைக்கு முதற்கட்டமாக, 24 ஆயிரம் கருவிகள் வந்தடைந்துள்ளன.. பின்னர் இவைகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அதன்மூலம் டெஸ்ட்களும் நடந்து வருகிறது.

கருவிகள்
தமிழகத்தை போலவே சத்தீஸ்கர் மாநிலத்திலும் ரேபிட் கிட் கருவிகள் கொரியாவில் இருந்து தருவிக்கப்பட்டன.. அவைகளை வைத்து அங்கும் சோதனைகள் விறுவிறுவென நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில்தான் அம்மாநில மாநில காங்கிரஸ் எம்எல்ஏ டிபி சிங் தியோ, தென்கொரியாவில் இருந்து 75ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மாநிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒரு கிட்டின் விலை ரூ.337 + ஜிஎஸ்டி என்றும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

சத்தீஸ்கர்
அதுமட்டுமில்லை.. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியா, தென்கொரிய நாட்டு தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் இவை வாங்கப்பட்டு உள்ளன என்றும் பெருமையாக கூறியிருந்தார். இப்படி சத்தீஸ்கர் அரசு வெளிப்படையாக உள்ளதைதான் பிரத்யேகமாக குறிப்பிட்டு, திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..
|
வெளிப்படைத்தன்மை
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "#CoronaVirus பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலை - எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்!," என வலியுறுத்தி உள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications