கொரோனா.. உலகம் முழுக்க விமான போக்குவரத்தின் நிலை என்ன? மிக எளிதாக தெரிந்து கொள்ள செம வழி!
கொரோனா காரணமாக எந்த நாட்டில் எல்லாம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, எங்கெல்லாம் விமான போக்குவரத்து செயல்படுகிறது என்பதை நீங்கள் இனி எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை: கொரோனா காரணமாக எந்த நாட்டில் எல்லாம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, எங்கெல்லாம் விமான போக்குவரத்து செயல்படுகிறது என்பதை நீங்கள் இனி எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,530 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுக்க விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இடையில் மே 3ம் தேதிக்கு பிறகான விமான டிக்கெட் புக்கிங்கை சில விமான நிறுவனங்கள் தொடங்கியது.
ஆனால் விமான போக்குவரத்து துறை இதற்கு தடை விதித்தது. உத்தரவு வரும் வரை விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் விமான புக்கிங் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதேபோல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளிலும் விமான போக்குவரத்தில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது.
இந்த நிலையில் எந்த அந்நாட்டில் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, எங்கே விமானம் செயல்படுகிறது, எங்கே தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். இதில் இருக்கும் உலக வரைபடத்தில் எந்த பகுதியை கிளிக் செய்தாலும், அந்த பகுதியில் விமான போக்குவரத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக சிங்கப்பூர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், மேப்பில் சிங்கப்பூர் இருக்கும் இடத்தை கிளிக் செய்தால் அங்கு விமான போக்குவரத்து எந்த நிலையில் இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதன்படி உலகம் முழுக்க எல்லா நாட்டின் விமான போக்குவரத்து விவரத்தையும் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.