சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் விஸ்வரூபம் எடுப்பார்! அதிமுகவை வழிநடத்துவார்! சண்முகத்தின் ஜம்பம் பலிக்காது! -கோவை செல்வராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்து அதிமுகவை வழிநடத்துவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் சட்டதிட்ட விதிகளை பற்றி எதுவும் தெரியாமல் சி.வி.சண்முகம் பேசி வருவதாக அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை” கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை”

கட்சியை கம்பெனி போல் நடத்த திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என, எடப்பாடி பழனிசாமி ஆதரவு முன்னாள் அமைச்சர் மீது கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

 கோவை செல்வராஜ்

கோவை செல்வராஜ்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கோவை செல்வராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இன்று மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் கட்சியை எடப்பாடி பழனிசாமி அழிப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு அதிமுகவின் சட்டதிட்ட விதிகளை பற்றி எதுவுமே தெரியாது என்றும் தனது எம்.பி. பதவியும் பறிபோய்விடும் என்பது கூட தெரியாமல் அவர் இப்படி பேசி வருகிறார் எனவும் கோவை செல்வராஜ் வேதனைத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறோம் எனக் கூறியும், யாரும் வரவேண்டாம், ஊரிலேயே இருங்கள் பார்த்துக் கொள்வோம் என்று ஓபிஎஸ் அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.

விஸ்வரூபம் எடுப்பார்

விஸ்வரூபம் எடுப்பார்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்து கட்சியை வழிநடத்துவார் என சத்தியம் செய்யாத குறையாக உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார் கோவை செல்வராஜ். ஆயிரம் சண்முகம் வந்தாலும் அண்ணா திமுகவை கைப்பற்ற முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி ஓ.பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும் கோவை செல்வராஜ் கடுமையாக விமர்சித்தார்.

Recommended Video

    cv Shanmugam ஆவேசம் | அந்த பதவியெல்லாம் காலாவதி ஆகிவிட்டது
    2017-ஆம் ஆண்டு

    2017-ஆம் ஆண்டு

    2017-ஆம் ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரால் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து என்று உணர்ந்த போது அப்போது அமைச்சர்களாக இருந்த 3 பேர் தினமும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று மணிக்கணக்கில் பேசி காலில் விழுந்து அவரை அழைத்து வந்துவிட்டு இப்போது வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் என வேதனை தெரிவித்தார். அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் எல்லாம் பொதுவாழ்க்கையில் மக்களுக்கு என்ன செய்துவிடப் போகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கோவை செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.

    English summary
    O.Panneerselvam will take Vishwaroopam:ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்து அதிமுகவை வழிநடத்துவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X