Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா.. 378 பேர் பலி.. 19,370 பேர் டிஸ்சார்ஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 16 ஆயிரத்திற்கும் அதிகமாக இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

Recommended Video

    தமிழகத்திற்கு மேலும் 3.84 லட்சம் தடுப்பூசிகள்…புனேவிலிருத்து சென்னைக்கு வந்து சோ்ந்தன!

    ஐசிஎம்ஆர் வெளியிட்ட கணிப்பின்படி இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபர் மாதத்திற்கு பின்பாக ஏற்படும் என்று கூறப்பட்டது. டிசம்பருக்குள் மூன்றாம் அலை உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

    நாடு முழுக்க இந்த மாதமும், அடுத்த மாதமும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் வெளியே வர தொடங்கி உள்ள நிலையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுற்றுலாத்தளம்

    சுற்றுலாத்தளம்

    சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளதால் அதன் காரணமாக கொரோனா கேஸ்கள் உயரும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியாவில் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளதால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கனவே ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பலி

    பலி

    கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,51,847 ஆக உயர்ந்துள்ளது. 1,97,239 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 3,40,36,684 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பேர் 3,33,74,485 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 19,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தேசிய அளவில் ஆங்காங்கே கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,83,396 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாவது நாளாக நேற்று 1300க்கும் குறைவான கேஸ்கள் பதிவானது. தமிழ்நாட்டில் புதிதாக 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,853 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,32,092 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,451 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

    கேரளா

    கேரளா

    கேரளாவில் ஒரு நாள் கேஸ்கள் உயர்ந்தும், ஒருநாள் குறைந்தும் பதிவாகி வருகிறது. நேற்று முதல்நாள் 11 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 9,246 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,29,944 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 95,892 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,667 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,06,856 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 96 பேர் பலியாகி உள்ளனர்.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா


    மகாஷ்டிராவில் மூன்று நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,86,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 2384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 29,560 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,705 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,13,418 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 35 பேர் பலியாகி உள்ளனர்.

    கர்நாடகா

    கர்நாடகா

    கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,82,399 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 310 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,922 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,34,870 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9578 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் கர்நாடகாவில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+