தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. எங்கெல்லாம் கடும் பாதிப்பு.. முழு லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது.
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரானா அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் ஆயிரத்தை கடந்து வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு மிக மிக கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதித்துள்ளது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 1497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது.. மருத்துவமனையில் அனுமதியான அன்றே கொரோனாவால் செய்தியாளர் பலி.. சோகம்!
சென்னை கொரோனா
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20981ல் இருந்து 22149 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10954 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர் தற்போது 10982 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருவள்ளூரில் 55 பேர்
சென்னைக்கு அடுத்தபடியாக . செங்கல்பட்டில் 135 பேருக்கும், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 135 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும், விழுப்புரத்தில் 11 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 16 பேர்
தஞ்சாவூரில் 7 பேருக்கும், திருவண்ணாமலையில் 6 பேருக்கும், கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 10 பேருக்கும், மதுரையில் 10 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும், திருப்பத்தூரில் 6 பேருக்கும், சேலம், தென்காசி, தேனியில் தலா 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 5 பேருக்கும், திருச்சியில் 4 பேருக்கும், திருநெல்வேலியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரியலூரில் ஒருவருக்கும், தருமபுரியில் 2 பேருக்கும், கோவையில் 2 பேருக்கும், புதுக்கோட்டையில் 2 பேருக்கும்,திருவாரூரில் ஒருவருக்கும், புதுக்கோட்டையில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் அதிகபட்சமக சென்னையில் 10982 பேரும், செங்கல்பட்டில் 1053 பேரும், திருவள்ளூரில் 635 பேரும், திருவண்ணாலையில் 250 பேரும், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும், தூத்துக்குடியில் 135 பேரும், கள்ளக்குறிச்சியில் 119 பேரும், மதுரையில் 74 பேரும், சேலத்தில் 69 பேரும், திண்டுக்கல்லில் 41 பேரும், ராமநாதபுரத்தில் 47 பேரும், விமான நிலைய குவாரண்டைனில் 109 பேரும், ரயில் நிலைய குவாரண்டைனில் 201 பேரும் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 7ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 380
- செங்கல்பட்டு 1854
- சென்னை 22149
- கோவை 161
- கடலூர் 481
- தர்மபுரி 13
- திண்டுக்கல் 167
- ஈரோடு 73
- கள்ளக்குறிச்சி 272
- காஞ்சிபுரம் 516
- கன்னியாகுமரி 87
- கரூர் 87
- கிருஷ்ணகிரி 37
- மதுரை 312
- நாகப்பட்டினம் 76
- நாமக்கல் 85
- நீலகிரி 14
- பெரம்பலூர் 143
- புதுக்கோட்டை 33
- ராமநாதபுரம் 106
- ராணிப்பேட்டை 130
- சேலம் 216
- சிவகங்கை 35
- தென்காசி 103
- தேனி 124
- திருப்பத்தூர் 42
- திருவள்ளூர் 1329
- திருவண்ணாமலை 492
- திருவாரூர் 59
- தூத்துக்குடி 329
- திருநெல்வேலி 386
- திருப்பூர் 114
- திருச்சி 116
- வேலூர் 64
- விழுப்புரம் 380
- விருதுநகர் 149
விமான நிலைய குவாரண்டைன்: 133
(வெளிநாடு)
விமான நிலைய குவாரண்டைன்: 47
(உள்நாடு)
ரயில் நிலைய குவாரண்டைன் 260