மதுரையில் மிகவும் குறைந்த கொரோனா.. கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த மாயாஜாலம்!
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாசிட்டிவிட்டி ரேட்டானது 5 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்.
பாசிட்டிவிட்டி ரேட் என்றால் என்ன என பார்த்தோமேயானால் 100 பேருக்கு கொரோனா சோதனை எடுத்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வருகிறது என்பதுதான் டிபிஆர் எனப்படும் Total Positivity Rate.
பொதுவாக 100 பேரில் 6 அல்லது 5 பேருக்கு கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு வருகிறது என்றால் அந்த இடத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என அர்த்தம்.

தனியார் புள்ளி விவரம்
அந்த வகையில் கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளரான விஜய் ஆனந்த் தினமும் கொரோனா அப்டேட்டுகளை ட்விட்டரில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் பாதிப்பு சதவீதம் 5 ஐ விட குறைவாகவே இருக்கிறது.

கொரோனா
சேலத்தில் மட்டும் 5.24 சதவீதம் இருக்கிறது. அதாவது 100 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்தால் அதில் 5 அல்லது 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வருகிறது. சேலத்திற்கு அடுத்தபடியாக அரியலூர் உள்ளது. இங்கு டிபிஆர் ரேட் 4.98 ஆக உள்ளது.

திருப்பூர்
பின்னர் திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம். இந்த மாவட்டங்களில் டிபிஆர் ரேட்டானது தலா 4.77 சதவீதமாக உள்ளது. நோய்த் தொற்று அதிகம் இருந்த கோவையில் 4.52 ஆக டிபிஆர் ரேட் உள்ளது. அது போல் நீலகிரியில் 4.38, ஈரோட்டில் 4.24, திருப்பூரில் 3.13 ஆக டிபிஆர் ரேட் விகிதம் உள்ளது.

முன்னேற்றம்
தலைநகர் சென்னையை எடுத்துக் கொண்டால் இங்கு 0.94 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தால் ஒருவருக்கு பாசிட்டிவ் என வருகிறது. கொரோனா ஹப்பாக இருந்த சென்னைக்கு இது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

எப்படி
அது போல் மதுரை மாவட்டம். இங்கு 0.52 சதவீதமாக டிபிஆர் ரேட் உள்ளது. அதாவது 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் எல்லாருக்கும் நெகட்டிவ் என வருகிறது. எனவே தமிழகத்தில் கொரோனா மிக மிக கட்டுக்குள் இருக்கும் மாவட்டங்கள் என பார்த்தால் மதுரை, சென்னை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்டவை ஆகும்.












Click it and Unblock the Notifications