Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்ம.. குறைகிறது தொற்று.. நீங்குகிறது கட்டுப்பாடுகள்.. வருகிறது தளர்வுகள்.. மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய தகவல் ஒன்று மத்திய அரசு சார்பில் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் தொடங்கி 2 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் கூட உலகில் எந்தவொரு நாடும் வைரஸ் பாதிப்பை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை..

அதற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸ் கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதை முற்றிலுமாக அழிப்பது என்பது இயலாத ஒன்றாக உள்ளது.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

அதேசமயம், தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டு நாடுகளில் பாதிப்பு குறைவாக உள்ளது ஆறுதலை தந்து வருகிறது.. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன... இந்தியாவில் தொடர்ந்து புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவானாலும். தொற்று எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.. அதேபோல, தொற்று வீதமும் குறைந்த அளவிலேயே உள்ளது.

 புது அறிவிப்பு

புது அறிவிப்பு

இதையடுத்து சில தளர்வுகளை மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது.. 4 நாட்களுக்கு முன்புகூட, இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.. அத்துடன் ஒமிக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை நீக்கம் செய்த சுகாதாரத்துறை, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல் நிலையை கவனித்துக்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது.

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

இந்நிலையில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது: "கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம்..

 பாதிப்புகள்

பாதிப்புகள்

புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி 21ம் தேதி முதல் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த வாரம், சராசரி தினசரி பாதிப்பு 50,476 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 27,409 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி பாதிப்பு விகிதம் 3.63 சதவீதமாக உள்ளது.

 நடைமுறைகள்

நடைமுறைகள்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தினசரி நோய்த்தொற்றின் பரவலை மதிப்பாய்வு செய்ய வேண்டும். பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகிய ஐந்து அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+