பொதிகை பெயர் மாற்றம்.. தமிழ் அடையாளத்தை அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி.. கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை: பொதிகை என அழைக்கப்பட்டு வந்த தமிழ் அடையாளத்தையும் மத்திய பாஜக அரசு அழிக்க முயற்சிக்கிறது என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல் 'டிடி பொதிகை' தொலைக்காட்சி சேனலின் பெயர் 'டிடி தமிழ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்தார். 24 ஆண்டுகளாக பொதிகை என அழைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை டிடி தமிழ் என மாற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசாங்கத்தால் 1975ல் தொடங்கப்பட்ட சென்னை தொலைக்காட்சி நிலையம், தமிழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி, 2000 ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றப்பட்டது. அதேநேரத்தில், பல்வேறு மொழிகளில் இருந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன.
இந்த 'பொதிகை' என்ற பெயர், தமிழர் திருநாளாம் பொங்கல் முதல் மாற்றப்பட்டு 'டிடி தமிழ்' என அழைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அண்மையில் அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவந்த 'பொதிகை' என்பதை 'டிடி தமிழ்' என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று பொதிகையின் பெயரை வெறுமனே டிடி தமிழ் என்று அறிவிப்பது எதற்காக?
அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற மலைகளின் பெயர்களை, அந்தந்த மொழி பேசும் மக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழில் பொதிகை, கன்னடத்தில் சந்தனா, தெலுங்கில் சப்தகிரி, மகாராஷ்டிராவில் சஹயாத்ரி, குஜராத்தில் கிரினார் என்று தொலைக்காட்சிகளுக்கு பெயர்கள் வைக்கப்பட்டன.'பொதிகை' பெயர் நீக்கம், இந்தப் பெயர்களையும் மாற்றுவதற்கான தொடக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அந்தந்த மாநில மக்களின் தனித்துவத்தை, உணர்வுகளை அவமதிக்கும் மத்திய அரசின் போக்கு கைவிடப்பட வேண்டும்.

ஏற்கனவே, பொதிகை தொலைக்காட்சியில், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வுக்கு போதிய இடம் வழங்காமல், தமிழ் சார்ந்த தனித்துவமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல், இந்தியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தமிழில் மொழி மாற்றம் செய்து உள்ளீடற்ற ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதிகை என அழைக்கப்பட்டு வந்த தமிழ் அடையாளத்தையும் மத்திய பாஜக அரசு அழிக்க முயற்சிக்கிறது. இந்த பெயர் மாற்ற முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை கைவிட்டு தொடர்ந்து பொதிகை என்ற பெயரிலேயே அழைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையை கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications