வாய் கொழுப்புடன் பேசுகிறார் ஆளுநர்.. தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது.. எச்சரிக்கும் முத்தரசன்!
தமிழ்நாட்டில் ஆளுநர் எங்கும் நடமாட முடியாது என்று முத்தரசன் எச்சரித்துள்ளார்.
சென்னை: காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக வாய் கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என்று கூறிய முத்தரசன், ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தெரிவித்தார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது பா.மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை முத்தரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர்.

முத்தரசன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் கூறுகையில், சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தவறி பெய்தப் பருவ மழையின் காரணமாக மிகக் கடுமையான அளவில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்களை அனுப்பி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கைப் பெற்று அந்த அறிக்கையினை மத்திய அரசிற்கு ஈரப்பதம் 22 சதவிகிதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

காலதாமதம்
ஆனால் மத்திய அரசு காலதாமதமாக 20 சதவிகிதம் வரையே நெல் கொள்முதல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே உள்ளது. இருப்பினும் முயற்சியை மேற்கொண்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

முத்தரசன் எச்சரிக்கை
பின்னர் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆளுநர் பேச்சு குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

சிபிஐ போராட்டம்
காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக வாகொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது. ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும். காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

சரணாகதியடைவதில் கைதேர்ந்தவர்
தொடர்ந்து அதிமுக விவகாரம் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்த வரையில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவின் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பவர் எடப்பாடி பழனிசாமி அல்ல. மத்தியில் ஆளக்கூடியவர்களே. அதேபோல் சரணாகதி அடைவதில் ரொம்ப கைதேர்ந்த மனிதர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications