கூடுதலாக ‘சீட்’ கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி.. யோசித்த திமுக குழு.. முதல்வர் வந்த பிறகு மீண்டும் பேச்சு!
சென்னை: கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளதாக, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடத்தின. அடுத்தகட்டமாக வரும் பிப்.9-ம் தேதி பேச திட்டமிட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு இன்று பிற்பகலில் சிபிஐ கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, சிபிஐ மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதிகளிலும் சிபிஐ கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடனும், நாளை மாலை மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச திமுக திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அக்கட்சியின் எம்.பி சுப்பராயன், "நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. தொடக்கம் மிக நன்றாக இருந்தது. இணக்கமான அணுகுமுறையை நாங்கள் பார்த்தோம். நல்லதே நடக்கும். நல்ல முடிவு கிடைக்கும்.
எந்த தொகுதிகளை கேட்டிருக்கிறோம் என்பது குறித்து இங்கே பகிர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. கடந்தமுறையை விட கூடுதலாகவே சீட் கேட்டிருக்கிறோம். திமுக குழுவினருக்கு ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் 7ஆம் தேதி சென்னை வந்த பிறகு தேதியை தீர்மானித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications