சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா... மருத்துவமனையில் சிகிச்சை!!
சென்னை: கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பதிவு செய்து இருப்பதற்கு பலரும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலுக்கும் இடையே தொடர்ந்து தனது அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்தார் பாலகிருஷ்ணன். தொலைக்காட்சி பேட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் கட்சிப் பணிகளிலும், கொரோனா உதவித் திட்டப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் எம்.எல்.ஏ.கள் மற்றும் எம்.பிக்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 40 சட்டசபை உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications